விபத்தை தடுக்கும் வழிமுறைகள்.! - Seithipunal
Seithipunal


வாகனம் நிறுத்தக்கூடாது என சொல்லப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தக்கூடாது.

வாகனம் ஓட்டும்பொழுது சூரிய ஒளியால் கண் கூசுபவர்கள் ளரn படயளள அணியுங்கள்.

பாடசாலை சூழலில் மற்ற வாகனங்களை முந்த வேண்டாம்.

பலமான காற்று, மழை, பனி கொட்டும் நேரங்களில் உங்கள் வாகனத்திற்கும் முன்னால் செல்கின்ற வாகனங்களுக்கும் இடையில் போதியளவு இடைவெளியை விடுங்கள்.

வாகனம் ஓட்டும்போது தற்செயலாக பயள pநனயட உட்பக்கமாக செருகப்பட்டால் கைகளை நீட்டி சரி செய்ய முயற்சிக்காதீர்கள்.

உருண்டு செல்லக்கூடிய பொருட்களை ஒருபோதும் வாகனத்தின் தரையில் போடாதீர்கள். அவை உருண்டு சென்று பெடலுக்கு கீழ் செருகப்பட்டு விபத்து ஏற்படலாம்.

வாகனத்தின் டயர்களை அடிக்கடி பரிசோதித்து நல்ல நிலையில் வைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படலாம்.

பனி, ஈரம், மழை போன்ற காலக்கட்டங்களில் றipநச-ஐ போட்டு கண்ணாடியுடனான தெளிவான பார்வையை உறுதி செய்யுங்கள்.

நீண்ட பயணங்களில் உங்கள் வாகனத்தின் டயர் அழுத்தம், திரவ அளவு, விளக்குகள், சிக்னல், இதர பழுது மற்றும் குறைபாடுகள் இவற்றை பயணத்தின் முன்பே சரி செய்வது அவசியம்.

முறைகேடாக ஓடக்கூடிய வாகனங்களினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை சமாளிக்கும் வகையிலும் உங்களுக்கு வாகனம் ஓட்டத்தெரிய வேண்டும்.

சரிவான தரையில் வாகனத்தை நிறுத்தினால் கட்டாயம் hயனெ டிசயமந-யை போட வேண்டும்.

வாகனம் ஓட்டுவதற்கு முன்னர் போதியளவு தூக்கத்தை பெறுங்கள். களைப்பு, சோர்வுடன் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது.

சாலை வேலைகள் நடைபெறும் இடங்களில் மிக குறைவான வேகத்தில் செல்ல வேண்டும்.

வாகனத்தை நீங்கள் வேகமாக ஓட்டுவதால் சேமிக்கக்கூடிய நேரத்தை விட, வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய வாகன விபத்தின் பாதிப்பு மிக கடுமையானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

road accident awareness 3


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->