திருநெல்வேலி: ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ராதாகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் பனிவாசகன்(67). இவர் அரசு போக்குவரத்து கழக ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் சம்பவத்தன்று பனிவாசகன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் பனிவாசகன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பணகுடி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பனிவாசகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retired transport employee commits suicide in Tirunelveli


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->