ரேஷன் கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்தது தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி மாதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால் ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் விடுமுறை நாளான ஜனவரி 30 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.

அன்றைய விடுமுறை தினத்தில் வேலை செய்ததால் அவர்களுக்கு மாற்று வேலை நாளில் விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்தவகையில் நாளை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ரேஷன் கடைகள் செயல்படாது. 

தமிழகத்தை பொருத்தவரை ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் இரண்டாவது வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதற்கு மாற்றாக அந்த வாரங்களில் உள்ள ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration shop holiday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->