#JustIN: முதுகுளத்தூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி காமுக ஆசிரியர் ஹபீப் கைது.! - Seithipunal
Seithipunal


கமுதி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி முதுகுளத்தூர் அருகே பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஹபீப் என்பவர் பணியாற்றி வருகிறார். 

இவர் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளின் எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகளுக்கு தொடர்பு கொள்ளும் ஹபீப், முதலில் பாடங்கள் தொடர்பாக தகவல் சொல்வது போல, பெற்றோர்கள் இருக்கிறீர்களா? என சுதாரிப்பாக கேட்டுக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது. 

பள்ளி மாணவிகளுக்கு போனில் தொடர்பு கொள்ளும் காமுக ஆசிரியர் ஹபீப், மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறான். இந்த விஷயம் தொடர்பான ஆடியோ காட்சிகள் வெளியாகவே, முதுகுளத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். 

இந்த விசாரணையில், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரின் விவகாரம் தெரியவரவே, ஹீபீப்பை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramanathapuram Mudukulathur Pallivasal School Science Teacher Arrest Sexual Torture for Girl Students


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->