தமிழகத்தில் பிறை தென்பட்டது; நாளை முதல் ரமலான் நோன்பு; தலைமை காஜி அறிவுப்பு..!
Ramadan fasting to begin in Tamil Nadu from tomorrow
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்.நேற்று சவுதி அரேபியாவில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் இந்த வருடத்திற்கான ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், நாளை (பிப்ரவரி 19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இன்று மாலை பிறை தென்பட்டதையடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். ரமலான் மாதம் வழக்கமாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும்.
அதன்படி, மார்ச் 18 அல்லது 19 அன்று ரமலான் முடிவடைந்து, அதைத் தொடர்ந்து ஈத்-அல்-பித்ர் (ரம்ஜான் பண்டிகை) கொண்டாடப்பவுள்ளது.
English Summary
Ramadan fasting to begin in Tamil Nadu from tomorrow