தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!
Rain with thunder and lightning in Tamil Nadu today
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 02 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் வளிமண்டல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain with thunder and lightning in Tamil Nadu today