இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை: வானிலை மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்   3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பெய்ய  தொடங்கியது, இதனால் தமிழகத்தில் நீலகிரி ,கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ,நெல்லை, பாபநாசம், தென்காசி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்தது .இந்த தென்மேற்க்கு பருவ மழையானது தொடர்ந்து கேரளாவில் பெய்து வந்ததால் அதன் தாக்கம் தமிழகத்திலும் காணப்பட்டது .இதையடுத்து தமிழகத்தில் மேல் அடுக்கு சுழற்சி அந்த வானிலை நிகழ்வுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது சென்னையில் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்தது குறிப்பாக சில வாரங்களில் அதிகமான வெப்பநிலையும் காணப்பட்டது. இந்த நிலையில் நான் ஆய்மையும் தகவல் வந்து வெளியிட்டுள்ளது. 

அதில் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்   3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை, வெப்பசலன மழை கடந்த சில மாதங்களாக  மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று, நாளை , நாளை மறுதினம் ஆகிய 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும்அறிவித்து உள்ளது.

இதேபோல், இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி  கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்க்படுகிறது.

நாளை மறுதினம்  கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதில் அ சிவப்பு எச்சரிக்கையும்,  ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை வரை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain in Tamil Nadu for 3 days starting today Weather center warns


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->