பொன்னமராவதி: 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. காமுகன் கைது.! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமுக இளைஞன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கட்பட்டான். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி, வார்பட்டு கிராமத்தை சார்ந்த 16 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கையில் மாயமாகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறுமி மாயமாகியுள்ளார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறுமி இன்று காவல் துறையினரால் திருமயத்தில் வைத்து மீட்கப்பட்டார். 

திருமயம் காவல் ஆய்வாளர் கௌரி சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், வார்பட்டு கிராமத்தை சார்ந்த கணேசன் (வயது 36), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. மேலும், அவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும் அம்பலமானது. 

இதனையடுத்து, சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் கணேசனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai Ponnamaravathi Minor Girl Aged 16 Sexual Abused Culprit Ganesan Arrested at Thirumayam Getting Jailed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->