#BREAKING :: சென்னையில் பரபரப்பு.. அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்...!!
Public besieged Minister Udayanidhi and protested in Chennai
அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு..!!
தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் சென்னை அடுத்த மூலக்கொத்தளம் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை ஒட்டி அனுசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மூலக்கொத்தளம் பகுதிக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்பொழுது மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டு கழிப்பிடம், குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பொதுமக்களை உதயநிதியை ஸ்டாலினை நெருங்க விடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகையிட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
Public besieged Minister Udayanidhi and protested in Chennai