தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்: காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை?
private TV reporter attack issue
பல்லடம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்தவர் மீது சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. இவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிய செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேச பிரபு நேற்றிரவு தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்வதாக காவல்துறையின் அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு காவல் துறை அதிகாரியிடம் பாதுகாப்பு கேட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரியிடம் நேச பிரபு பேசிக்கொண்டிருந்தபோதே அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி உள்ளது.
அப்பொழுது நேசபிரபு தன்னை காப்பாற்றும்படி காவல் துறையை அதிகாரியிடம் கதறியுள்ளார். இதற்கு காவல்துறை அதிகாரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க வேண்டும் என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்மகும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தும் அலட்சியமாக இருந்த காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
private TV reporter attack issue