போலி மருத்துவர்கள்..கைராசி மருத்துவர்கள்! தனியார் மருத்துவமனை உரிமையாளர் கைது! - Seithipunal
Seithipunal


போலி மருத்துவர்கள் சிக்கிய வழக்கில் தனியார் மருத்துவமனை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு அகஸ்டியன், பரதன் ஆகிய இருவர் போலிச் சான்றிதழ் கொடுத்து மருத்துவர் பணியில் சேர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த்தும் மருத்து மாத்திரைகளை வழங்கியும் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலி மருத்துவர்கள் அகஸ்தியன்,பரதன் ஆகிய இவர்களையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறை சந்தேகம் அடைந்தனர்.

காவல்துறை அதிகாரிகள் மருத்துவர் சரவணனை கைது செய்தனர். வெளிய வரமறுத்த டாக்டர் சரவணனை போலீசார் தரதரவென இழுத்து வந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் சரவணனன் பூத்தொட்டிகளை உடைத்து கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Private hospital owner arrested in case of fake doctors


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->