பொங்கல் டார்கெட் கம்ப்ளீட்... ரூ.589 கோடிக்கு மதுபானம் விற்பனை.!
Pongal Tasmac Sales Liquor Alcohol Rupees 589 Crores 2021
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு, பொங்கல் விளையாட்டுகள் மற்றும் கொண்டாட்டங்கள் என்று தமிழகமே களைகட்டி விழாக்கோலம் பூண்டு இருந்தது.
பண்டிகை காலங்கள் என்றாலே மதுபிரியர்களுக்கு மதுஇல்லாத கொண்டாட்டமா? என்று பல கேள்விகளை முன்வைத்து மதுபானங்களை வாங்கி குடித்து வருவது வழக்கமான ஒன்று. வருடா வருடம் பண்டிகை காலங்களில் மதுபான வசூல் தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையன்று ரூ.589 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் ரூ.417 கோடியே 18 இலட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 15 ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜனவரி 16 ஆம் தேதியான நேற்று ரூ.172 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. மொத்தமாக பொங்கல் பண்டிகை மதுபான விற்பனை ரூ.589 கோடிக்கு ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pongal Tasmac Sales Liquor Alcohol Rupees 589 Crores 2021