#சற்றுமுன் || ஓய்வுபெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேலின் துப்பாக்கி, 8 தோட்டாக்கள்., சேலம் அருகே பரபரப்பு.!
Pon Manikkavel Gun And bullets
ரயில் பயணத்தின்போது பொன்மாணிக்கவேல் தனது துப்பாக்கியை தவற விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஏற்காடு ரயிலில் ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தனது கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் தவற விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ரயிலில் சென்ற போது பொன்மாணிக்கவேல் தனது துப்பாக்கியைத் தொலைத்துள்ளார்.
மேலும், அந்தத் துப்பாக்கியில் 8 தோட்டாக்கள் இருந்துள்ளது. பொன்.மானிக்கவேல் வந்த ரயிலில் இதனையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக பொன்.மணிக்கவேல் பயணம் செய்த அந்த ரயில் பெட்டியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரின் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்கப்பட்டு, பொன்மாணிக்கவேல் இடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டது.
துப்பாக்கியை மீட்டெடுக்கும் வரை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
English Summary
Pon Manikkavel Gun And bullets