16 வயதில் காதல்.. கர்ப்பம்.. காதலனின் தாத்தாவால் விபரீதம்.! திரைப்படத்தை மிஞ்சிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் எனும் இருபது வயது இளைஞரை காதலித்துள்ளார். 

இதனைப் பயன்படுத்தி விக்னேஷ் அந்த சிறுமியை அடிக்கடி ஆசை வார்த்தை சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த 16 வயது சிறுமி கர்ப்பம் அடைந்த நிலையில், தனது காதலனிடம் தனது கர்ப்பம் குறித்து சிறுமி தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த அவர் தனது உறவுக்கார தாத்தாவான சின்னசாமி என்பவரின் உதவியுடன் கருவை கலைக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், சின்னசாமி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி வேறு இடத்திற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தொடர்ந்து கருவை கலைப்பதாகக் கூறி சின்னசாமி ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று ள்ளார்.

60 வயதான அர்ஜுன் என்ற அந்த மந்திரவாதியும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று தனது வீட்டிற்கு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார். 

அவர்கள் போலீசில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, போலீசார் மந்திரவாதி அர்ஜுனன், விக்னேஷ் மற்றும் உடந்தையாக இருந்த விக்னேஷின் நண்பர் ஈஸ்வரன், விக்னேஷின் தாத்தா சின்னசாமி உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்த நிலையில் விக்னேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi Girl raped and Abused by Boyfriend family


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->