கொலை செய்த திருடனின் தாயாரிடம் 23 நிமிடங்கள் பேசிய எஸ்எஸ்ஐ பூமிநாதன்.! அந்த கடைசி உரையாடல்.!
POLICEE SSI MURDER CASE
புதுக்கோட்டை மாவட்டம், பள்ளப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே இருசக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி அளவில் ஆடுகளை திருடிச் சென்றவர்களை துரத்தி பிடித்தபோது, சிறப்பு காவல் ஆய்வாளரை திருட்டு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது.
சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ஆடு திருடிய இரண்டு நபர்களை அவர் பிடித்து விசாரணை செய்துள்ளார்.
அப்போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் அவர்களை பூமிநாதன் மற்றும் சித்திரவேல் என்ற காவலரும் துரத்தி சென்று உள்ளனர்.
பள்ளப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்த சிறப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். திருடர்களை நான் பிடித்து வைத்துள்ளேன். நீங்கள் உடனே வாருங்கள் என்று தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், 3 திருக்களில் ஒருவரின் தாயாரிடம் எஸ்எஸ்ஐ பூமிநாதன் 23 நிமிடங்கள் தொலைபேசியில் பேசி அந்த திருடன் பற்றிய விபரங்களை கேட்டறிந்து உள்ளார்.
எஸ்எஸ்ஐ பூமிநாதன் செல்போன் உரையாடலை ஆதாரமாக கொண்டே தற்போது, புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள், மற்றும் 19 வயது உடைய வாலிபர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.