திருச்சி || பணிக்கு சென்ற காவலர் மாரடைப்பில் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
Police Man Death in Heart attack
பணிக்கு சென்ற காவலர் மாரடைப்பில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பழையூர் மேடு கிழக்கு பகுதியை சேர்த்தவர் ராமகிருஷ்ணன். இவர் ஜீயபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட வாத்தலை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அவர் பணிக்கு தனது ஒரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வழியிலேயே மயக்கம் வந்ததால் வாகனத்தை நிறுத்திய அவர் மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police Man Death in Heart attack