திருவாரூர் || 15 வயது சிறுமியை தாக்கிய மர்ம நபர்கள்.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமியை தாக்கிய மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூரில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று இரவு கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.

ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை தேடிவந்தனர்

இதனிடையே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிறுமி மயங்கி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமி கடைக்கு சென்றபோது மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து கட்டையால் அடித்து தெரியவந்தது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police Investigation about Who attack 15 years old girl


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->