கர்ப்பிணி பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.. ராமநாதபுரம் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பவானிவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாதன். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே ஊரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் மதன் சந்தோஷம் வீட்டின் அருகே விளையாடி வந்துள்ளார்.

அதனை கண்டு ஆத்திரமடைந்த கோபிநாத் சந்தோசை ஆபாசமாக திட்டி உள்ளார். இதனை அவரின் தாத்தாவிடம் கூறியுள்ளார். அந்த முதியவர் பேரனை ஏண் திட்டினார் என்று கேட்டபோது அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட சந்தோஷத்தில் லதா மற்றும் அவரது உறவினர்கள் கோபிநாத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றவே கோபிநாத் அங்கிருந்த கற்களால் மூவரையும் தாக்கினர். மேலும் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்த மூன்று பெண்களையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கர்ப்பிணியான ராசாத்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

 அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அழைக்கப்பட்டு வந்த வேதனை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

police investigation about pregnant lady attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->