13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டாகிராம் காதலன்..!! வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய அவலம்..!!
Police are searching for the youth who sexually abused the girl
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றதால் அந்த சிறுமிக்கு பெற்றோர் செல்போன் வாங்கி தந்துள்ளனர்.
இந்நிலையில், அவர் அதில் இன்ஸ்டாகிராம் செயலியை பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது சிறுமிக்கு ராஜபாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்சினியர் ஸ்ரீநாத்(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனை அடுத்து, ஸ்ரீநாத் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஆசைவார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.
அதுமட்டுமின்றி, சிறுமிக்கு தெரியாமல் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான். இந்நிலையில், தனது உண்மை முகத்தை காட்ட தொடங்கியுள்ளான்.
அந்த சிறுமியிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளான்.தரவில்லை எனில் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.
இதனால், பயந்த அந்த சிறுமி அவன் கேட்கும் போதெல்லாம் வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நகை குறைந்து இருப்பதை அறிந்த பெற்றோர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது கண்ணீர் மல்க நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து தலைமறைவாக இருக்கும் ஸ்ரீநாத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தங்கள் குழந்தைகள் சமூகவலைதளங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
English Summary
Police are searching for the youth who sexually abused the girl