ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை., காமகொடூரனை தேடி வரும் காவல்துறை..! - Seithipunal
Seithipunal


17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளிடம் இதுகுறித்து கேட்டனர்.

அப்போது சிறுமி தெரிவித்த செய்தி அவர்களை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது.  சிறுமி வேலைக்கு சென்ற இடத்தில் முனியராஜ்  என்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முனியராஜிய போக்சோ சட்டதின் கீழ் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police are searching for the person who sexually abused a girl near Virudhunagar


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->