ஆசை வார்த்தை கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை., காமகொடூரனை தேடி வரும் காவல்துறை..!
Police are searching for the person who sexually abused a girl near Virudhunagar
17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.
இதனை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மகளிடம் இதுகுறித்து கேட்டனர்.

அப்போது சிறுமி தெரிவித்த செய்தி அவர்களை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது. சிறுமி வேலைக்கு சென்ற இடத்தில் முனியராஜ் என்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் முனியராஜிய போக்சோ சட்டதின் கீழ் தேடி வருகின்றனர்.
English Summary
Police are searching for the person who sexually abused a girl near Virudhunagar