கிணற்றில் கிடந்த பெண் சடலம்.. காவல்துறை தீவிர விசாரணை..!
Police are investigating the body of a woman lying in a well
கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு ஓழிப்பு பிரிவில் ஒப்பந்த பணியாளராக 30 வயது பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரின் சடலத்தை அந்த வளாகத்தில் இருந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 30 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லாததால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்த சிகிச்சையினால், அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மன உளைச்சலில் இருந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
English Summary
Police are investigating the body of a woman lying in a well