சென்னை! தனியார் வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை தனியார் வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் சென்னையில் உள்ள கே.கே நகரில் இயங்கிவரும் தனியார் வங்கியில் தங்க முலாம் பூசப்பட்ட சுமார் 210 சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்து 32 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளனர்.

இதை தொடர்ந்து வங்கியில் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தபோது போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் தெரிவித்த நிலையில், பணமோசடி செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.

நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த தமீம் அன்சாரி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pledging fake gold in private bank


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->