2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள் இயக்க ஒப்பந்தப்புள்ளி!
Phase 2 agreement to operate 600 electric buses
சென்னையில் 2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது,இந்த ஒப்பந்த நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகரத்தில் காற்றுமாசு குறைக்கவும், பொதுமக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்துத் தரும் நோக்கில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC), மின்சார பஸ்கள் இயக்கும் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
மொத்தமாக 1225 மின்சார தாழ்தள பஸ்கள் (low-floor electric buses) சென்னை மற்றும் சுற்றுவட்டார போக்குவரத்து சேவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்த விலை ஒப்பந்தம் (Gross Cost Contract) முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக – 625 மின்சார பஸ்கள்,அதில் ஏ.சி. அல்லாத பஸ்கள்: 400,ஏ.சி. பஸ்கள்: 225
இயக்கும் நிறுவனம்: ஓம் குளோபல் மொபிலிட்டி (அசோக் லேலண்ட் துணை நிறுவனம்)பணிமனைகள்: வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், தண்டையார் பேட்டை, பூந்தமல்லி
இரண்டாம் கட்டம் – 600 மின்சார பஸ்கள் (தற்போது திட்டமிடப்பட்டவை)அதில் ஏ.சி. பஸ்கள்: 400ஏ.சி. அல்லாத பஸ்கள்: 200 இயக்கப்படவுள்ளன.
ஓம் குளோபல் மொபிலிட்டி,ஈவி டிரான்ஸ்,ஈகிள் கன்ஸ்டிரக்ஷன்,டிராவல்டைம் மொபிலிட்டி இந்தியா,
இந்த ஒப்பந்தத்திற்கான அறிவிப்பில் பங்கேற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்த நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மின்சார பஸ்கள் திட்டம், சென்னை மாநகரத்திற்கு ஒரு பசுமை போக்குவரத்து புரட்சி என்று கருதப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு சேதமின்றி மக்கள் நலனில் அமையும் என்றும் நம்பப்படுகிறது
English Summary
Phase 2 agreement to operate 600 electric buses