பெரியமேடு நெடுஞ்சாலையில் வெடித்துச் சிதறிய பெட்ரோல் குண்டுகள்...! சென்னை பெண் வீட்டின் முன் தொடர் தாக்குதல்...! - பதற்றத்தில் மக்கள்...!
Petrol bombs exploded Periyamedu highway series attacks front Chennai woman house People panic
சென்னை பெரியமேடு பகுதியில் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேரு பூங்கா அருகே உள்ள பெரியமேடு நெடுஞ்சாலையில் வசித்து வரும் பெண் ஒருவரின் இல்லத்தின் முன்பு நேற்று இரவு சுமார் 8 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்ததாகக் கூறப்படும் மூன்று மர்மநபர்கள் திடீரென அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

வீசப்பட்ட மூன்று பெட்ரோல் குண்டுகளும் தரையில் விழுந்தவுடன் வெடித்து தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. வெடிச்சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த பெண் அதிர்ச்சியடைந்து அலறியபடி வெளியே ஓடிவந்தார். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. தகவலறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, தீவிர விசாரணையை தொடங்கினர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் மர்மநபர்களின் அடையாளத்தை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Petrol bombs exploded Periyamedu highway series attacks front Chennai woman house People panic