“வடிவேலு அநியாயமாக சம்பளம் கேட்டார்; திடீரென தலைக்கனம் வந்துவிட்டது” – தயாரிப்பாளர் சங்கிலி முருகன் பரபரப்பு பேச்சு
Vadivelu demanded an exorbitant salary he suddenly became arrogant Producer Sangili Murugan sensational remarks
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சங்கிலி முருகன், அவர் ஒரு கட்டத்தில் தலைக்கனம் கொண்டவராக மாறிவிட்டதாகவும், சுறா படத்தில் நடிக்க அதிகப்படியான சம்பளம் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
1986-ம் ஆண்டு முதல் தயாரிப்பாளராக இருந்து வரும் சங்கிலி முருகன், கரிமேடு கருவாயன், காதலுக்கு மரியாதை, பாண்டிநாட்டு தங்கம், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை வெற்றிப்படமாக அமைந்த நிலையில், பின்னர் வெளியான சுறா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
சுறா படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் விரும்பியதாகக் கூறிய சங்கிலி முருகன், அவரிடம் சம்பளம் குறித்து பேசியபோது மிகவும் அதிகமான தொகையை கேட்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு நாளைக்கு ரூ.10 லட்சமும், அரைநாள் பணிக்கும் அதே அளவு சம்பளமும் கேட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், வடிவேலு ஆரம்ப காலத்தில் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், பின்னர் அவரிடம் மாற்றம் ஏற்பட்டதாகவும் சங்கிலி முருகன் தெரிவித்துள்ளார். தேவர் மகன் படத்தில் ரயிலில் இருந்து இறங்கும்போது பெட்டியைத் தூக்கிச் சென்ற வடிவேலு, அப்போது தன்னிடம் மிகவும் இயல்பாக பழகியதாகவும், பின்னர் படிப்படியாக அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வடிவேலுவின் பல நகைச்சுவைக் காட்சிகள் படப்பிடிப்பு தளத்திலேயே உருவாக்கப்பட்டதாகவும் சங்கிலி முருகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நேசம் புதுசு திரைப்படத்தில் சங்கிலி கருப்பு மற்றும் வடிவேலு இணைந்து நடித்த “கையைப் பிடிச்சு இழுத்தியா” நகைச்சுவைக் காட்சி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
வடிவேலுவின் சம்பளம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும், 1990-களின் பிற்பகுதி முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக அவர் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vadivelu demanded an exorbitant salary he suddenly became arrogant Producer Sangili Murugan sensational remarks