அதிகாலை சம்பவம்: மீன் வியாபாரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை! முன்விரோதம் காரணமா? - Seithipunal
Seithipunal


பெரம்பலூர், திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 26) இவர் மீன் வியாபாரி. இவர் நாள்தோறும் திருச்சி, புத்தூர் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் கொள்முதல் செய்வது வழக்கம். 

அதுபோல் இன்று அதிகாலை 4 மணியளவில் ராமராஜ் மீன் கொள்முதல் செய்வதற்காக பெரம்பலூரில் இருந்து அவருடைய நண்பர்கள் 4 பேருடன் காரில் வந்து மீன் கொள்முதல் செய்த பின் கார் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் ராமராஜனை  வழிமறித்து திடீரென அரிவாள், கத்தியால் வெட்டினர். 

இதனால் ராமராஜ் அந்த கும்பலில் இருந்து உயிர் தப்பிக்க அங்கும் இங்கும் ஓடினார். இருப்பினும் கும்பல் ராமராஜனை  விடாமல் துரத்தி சரமாரியாக கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டியதில் ராமராஜ் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறி அடித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது ராமராஜ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அவரை கொன்று இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடவியல் நிபுணர்கள் மூலம் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur fishmonger killed gang revenge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->