பட்டுக்கோட்டை அருகே கதண்டு வண்டுகள் தாக்கியதில் 9 பெண்கள் படுகாயம்!
Pattukottai 9 women injured attacked beetles
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கதண்டு வண்டுகள் தாக்கியதில் ஒன்பது பெண்கள் படுகாயமடைந்த நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத்திட்டப் பணி நடைபெற்றது. இதில், 50 பெண்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த தென்னை மரத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கியது.
இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில், ஒன்பது பெண்களின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கதண்டு வண்டுகள் தாக்கியது. இதனால், அவர்கள் வலியால் துடிதுடித்து மயக்கம் அடைந்தனர்.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, ஆபத்தான நிலையிலிருந்த அந்த ஒன்பது பெண்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Pattukottai 9 women injured attacked beetles