பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் பரோட்டா மாஸ்டர் கைது.!
Parotta master arrested for sexually harassing school girl in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரோட்டா மாஸ்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் திமிரு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் பிரசாந்த் (28) ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயதுடைய பள்ளி மாணவி பேருந்தில் பள்ளிக்கு சென்றபோது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியை பிரசாந்த் தொடர்ந்து நோட்டமிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிரசாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவரை சிறையில் அடைத்தனர்.
English Summary
Parotta master arrested for sexually harassing school girl in Perambalur