தென்காசி | கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு! கல்லூரி முதல்வர் முகமது போக்சோ சட்டத்தில் கைது! - Seithipunal
Seithipunal


17 வயது பாரா மெடிக்கல் கல்லூரி மாணவியிடம், ஃபோனில் தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தென்காசி ஆசாத் நகர் பகுதியில் மாஸ் பாரா மெடிக்கல் என்ற தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இதன் நிறுவனர் & தலைவர் முகமது அன்சாரி.

இவர் தன்னுடைய கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு தொடர்ந்து தொலைபேசியின் வாயிலாக  பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் பலமுறை அன்சாரியை கண்டித்துள்ளனர்.

இதற்கெல்லாம் அசையாத அன்சாரி ,தொடர்ந்து தொலைபேசியின் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து இதை விசாரித்த போலீசார், உடனடியாக கல்லூரி நிறுவனர் அன்சாரியை அதிரடியாக கைது செய்து, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramedical college student sexually harassed by principal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->