சென்னையில் பீதி! துரைப்பாக்கம்–சோழிங்கநல்லூர் ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! நடந்தது என்ன...?
Panic Chennai Bomb threat IT companies Duraipakkam Sholinganallur What happened
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல்கள் பீதி சூழலை ஏற்படுத்தி வருகின்றன. இது கோவில்கள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், அரசியல் தலைவர்களின் இல்லங்கள், செய்தி நிறுவனங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் என ஒன்றின் பின் ஒன்றாக மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த தொடர் மிரட்டல்களின் பின்னணி குறித்து சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது கவலைக்கிடம்.இந்நிலையில், இன்று காலை சென்னையின் ஐ.டி. காரிடாரான துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகள் மீண்டும் கலக்கம் அடைந்தன.
அதுமட்டுமின்றி, துரைப்பாக்கத்தில் உள்ள 10 மாடி உயரமான "Chennai One" ஐ.டி. வளாகம் மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்துக்கு அடையாளம் தெரியாத நபர் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வளாகங்களை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடவடிக்கைகளை தொடங்கினர்.இந்த பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த நிறுவனங்கள் உடனடியாக ஊழியர்களுக்கு அவசர அறிவிப்பு வெளியிட்டு, “வீட்டிற்குத் திரும்பி செல்லவும், அலுவலகம் இன்று மூடப்படும்” என அறிவித்துள்ளன.
மேலும், நகரத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், காவலர்கள் இந்த மிரட்டலின் மூலத்தையும் நோக்கத்தையும் கண்டறிய முழு வேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Panic Chennai Bomb threat IT companies Duraipakkam Sholinganallur What happened