பாளையங்கோட்டை போலீஸ் நடவடிக்கை...! - பணம் பறிக்க முயன்ற சரித்திர குற்றவாளி கைது...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை வடக்கு கென்னடி தெருவைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரவிக்குமார் (48), நகரில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்த கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும், சமாதானபுரம் வாட்டர் டேங்க் அருகே சென்ற திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் அவர் வழிமறித்து, அச்சுறுத்தி பணம் பறிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பணம் தர மறுத்ததால், இருவரையும் அவதூறு வார்த்தைகளால் திட்டி, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்க முயன்றதாகவும் புகார் தெரிவிக்கிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவரும் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ரவிக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Palayamkottai Police action notorious criminal who attempted extort money arrested


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->