விழுப்புரம்: அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..! 15-க்கும் மேற்பட்டோர் காயம்..! - Seithipunal
Seithipunal


மரக்காணம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை மார்க்கமாக பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தாழங்காடு பகுதியில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் நாகப்பட்டினம், காரைக்கால், தேவாரணியம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 27 பயணிகள் பயணம் செய்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 15 injured in government bus overturns ditch in Villupuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->