மோடி பெயரில் தங்க ரதம் இழுத்த சுவாமி தரிசனம் செய்த ஓ.பி.எஸ்.!
OPS worship palani temple
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்ய ரோப் கார் மூலம் மலைகோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து தங்கரதம் இழுக்க பெயர் பதிவு செய்ததில் வரிசையில் 102 இல் அவரது பெயரும், வரிசை 103 பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் குறிப்பிட்டு தங்கரதம் இழுக்க பணம் கட்டினார்.
தங்கரத நிலை ஒன்றில் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அவர், மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் பங்கேற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
English Summary
OPS worship palani temple