அடுத்து என்ன? சென்னையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதன் விவரம் பின்வருமாறு :

செய்தியாளர் :  நீங்கள் எப்போது சசிகலாவை சந்திப்பீர்கள்? சசிகலாவை சந்திக்க நீங்கள் சந்திக்க அவர் நேரம் ஒதுக்கி உள்ளாரா?

ஓபிஎஸ் : சின்னம்மா அவர்களை கூடிய விரைவில் சந்திப்பேன்.

செய்தியாளர் :  ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய குடும்ப நலனுக்காக யாரை வேண்டுமானாலும் சந்திப்பார் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். இது பற்றி உங்களுடைய கருத்து? 

ஓபிஎஸ் : உதயகுமாருக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

செய்தியாளர் : ஓ பன்னீர்செல்வம் ஒரு காலாவதியான மருந்து என்று உங்களை கடுமையாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துகிறாரே?

ஓபிஎஸ் : அது அவருடைய குண நலனை பிரதிபலிக்கிறது.

செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓ பன்னீர்செல்வம் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.
 

ஆர்பி உதயகுமார் எம்எல்ஏ பேட்டியின் விவரம் : தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக யாரை எதிர்த்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, தற்போது அவர்களுடனே இணைந்துள்ளார்.

மக்கள், தொண்டனிடம் ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. தனக்குப் பதவி இல்லை என்று கூறினால் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றக்கூடியவர் ஓ பன்னீர்செல்வம். தன்னுடைய குடும்ப நலனுக்காக மட்டுமே ஓ பன்னீர்செல்வம் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திப்பார். 

ஓ பன்னீர்செல்வம் ஒரு காலாவதியான மருந்து, அவரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை" என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS Next move may 2023


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->