'ரீல்ஸ்' வீடியோவுக்கு எதிர்ப்பு..கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!
Opposition to reels video College student made a drastic decision
'ரீல்ஸ்' வீடியோ விவகாரத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சைதன்யா.22 வயதான இவர் அழகு கலை நிபுணராகவும் ,அடிக்கடி வித்தியாசமாக 'ரீல்ஸ்' வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்தார்.
இந்தநிலையில் சைதன்யா, ராமேனஹள்ளியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரை கடந்த 2 ஆண்டாக அவர்கள் காதலித்து வந்தார் . இந்த காதல் விவகாரம் சைதன்யாவின் தாய் க்கு தெரியவர அவரை கண்டித்து வந்தார். ஆனால் சைதன்யா தனது தாய்க்கு தெரியாமல் விஜயுடன் பழகி வந்தார்.
இதற்கிடையில் சைதன்யா, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' மற்றும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டு வந்தது காதலன் விஜய்க்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று தனது புதிய புகைப்படத்தை சைதன்யா வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த விஜய், சைதன்யாவின் வீட்டுக்கு வந்தது அவரது தாயிடம் இதுகுறித்து கூறினார். இதனால் தாய் சைதன்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கோபம் அடைந்த சைதன்யா விஜயிடம் செல்போனில் பேசிய சைதன்யா, தான் தற்கொலை செய்யப்போகிறேன் எனக் கூறியுள்ளார்.
வீட்டில் அங்கு மின்விசிறியில் சைதன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து விஜய், சைதன்யாவின் தாய் சவுபாக்யா ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சைதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், 'ரீல்ஸ்' வீடியோ விவகாரத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சைதன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
English Summary
Opposition to reels video College student made a drastic decision