ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றம்! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டபேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேறுபட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் மசோதா நிறைவேற்றபட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்தார்.

மசோதா குறித்த அவரின் உரையில், "முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகள், ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்தார்.

மேலும், "மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு. சட்ட ஒழுங்கைப் பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், இதயமுள்ளவர்கள் யாரும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மசோதா குறித்து அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online gambling Ban Law Bill TN Assembly 23 march 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->