தஞ்சாவூர் : சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கீழமணக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (64). இவர் சிறுமி ஒருவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோர் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் தங்கவேலுவை கைது செய்தனர். 

இதையடுத்து இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேலு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

oldman who sexually harassed the girl was jailed for 6 years in Thanjavur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->