விருதாச்சலம் அருகே பரிதாபம்.! தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம். இவரது மனைவி தங்கமணி (65). இவர் இன்று அதிகாலை வீட்டிலிருந்த குப்பைகளை கொட்டுவதற்காக நாச்சியார் பேட்டை ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தங்கமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பனிமூட்டம் காரணமாக தங்கமணி ரயில் வருவதை கவனிக்காமல் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old woman killed in train collision in Cuddalore


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->