ஜப்பானின் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி..! - Seithipunal
Seithipunal


ஜப்பானில் இன்று 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  தற்போது வடகிழக்கு கடற்கரையை மூன்று மீட்டர் உயர அலைகள் தாக்கக்கூடும் வானிலை மையம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவிலானது என்றும், அந்த அளவு வலிமையானது என்றும் குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 11.15 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி 14.15) ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதியை இந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கி.மீ தொலைவில், 50 கி.மீ ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாட் ஆகிய வடக்கு மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People panic as tsunami warning issued after powerful earthquake in Japan


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->