போக்சோ வழக்கில் சாதகமாக தீர்ப்பு வராது.. அரியலூர் அருகே முதியவர் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


போக்சோ வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக வராது என்ற அச்சத்தில் முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர் மாவட்டம், ஆலத்தியூர் காலணி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்பைடையில் அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்த போக்சோ வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்த வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வராது என எண்ணிய அவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man committed suicide near Ariyalur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->