ஆக்ரா ரயிலில் சூட்கேசில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்; கூடுவாஞ்சேரியில் சிக்கிய ஒடிசா தம்பதிகள்; தலையை தேடும் போலீசார்; வெட்டி சமைத்துள்ளதற்கான தடயம்..? - Seithipunal
Seithipunal


ஆக்ரா ரயி​லில் சூட்​கேசில் உடல் பாகங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​ட சம்பவம் தொடர்​பாக போலீ​ஸார் மேற்​கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சடலம் கூடு​வாஞ்​சேரி அருகே கொலை செய்துவிட்டு அதை மறைத்து  கொண்டு சென்றுள்ளமை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கடந்த 05-ஆம் தேதி,  ஆக்​ரா​வுக்கு சென்​ற​ தமிழ்​நாடு எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் இருந்த சிவப்பு நிற சூட்​கேஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில், சிதைந்த நிலை​யில் சடலம் மீட்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்​பாக உத்​தரப்​பிரதேச ரயில்வே மற்​றும் காவல் துறை, தமிழ்​நாடு ரயில்வே காவல் துறை​யின் உதவியை நாடி விசாரணையை தீவிரப்படுத்தியது. அதன்படி, ரயி​லில் ஏறு​வதற்கு முன்​பு, ஓர் ஆணும் ஒரு பெண்​ணும் சிவப்பு நிற சூட்​கேசுடன் சென்னை சென்ட்​ரயிலுக்குள் நுழைவதை சிசிடிவி காட்சி மூலம் கண்​டறிந்​துள்ளனர்.

அவர்​கள் சூட்​கேஸை ஒரு பெட்​டிக்​குள் வைத்​து​விட்​டு, ரயில் புறப்​படு​வதற்கு முன்பே அதிலிருந்து இறங்​கி, புறநகர் ரயி​லில் ஏறி கூடு​வாஞ்​சேரி​யில் இறங்​கியது தெரியவந்துள்ளது.

அதனை கொண்டு, கூடு​வாஞ்​சேரி சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள  200-க்​கும் மேற்​பட்ட சிசிடிவி காட்​சிகளை போலீ​ஸார் ஆய்வு செய்​தனர். இதில் கூடு​வாஞ்​சேரி மசூதி தெரு​வில் உள்ள வீட்​டிலிருந்து குறித்த தம்​பதி சூட்​கேசுடன் சென்​றது தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், வீட்​டின் பூட்டை உடைத்து உள்ளே சென்​ற சென்ற போலீசார் தேடுதல் நடத்தியுள்ளனர். அங்​கு, ஒருவரை கொலை செய்து உடலை எலும்பு தனி​யாக, சதை தனி​யாக வெட்டி எடுத்த அடை​யாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரிய பாத்​திரத்​தில் அசைவ உணவு சமைத்​திருப்​பதையும் போலீசார் கண்​டறிந்​துள்ளனர்.

சமைத்த உணவில் மனித உறுப்பு இருப்​ப​தாக சந்​தேகம் எழுந்​த​தால், அந்த பாத்​திரத்தை செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு ஆய்​வுக்​காக அனுப்​பி​யுள்​ளனர். சம்​பவம் நடந்த வீட்​டில் ஒடி​சாவைச் சேர்ந்த மணிக் உதின் லஷ்கர் ​(40), மஞ்சி (35), ஹையத்​துன் நிஷா (38) வசித்​தது வந்துள்ளமை விசா​ரணை​யில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அளவில் வீட்டை வாடகைக்கு எடுத்து தம்​ப​தி​யருடன், கொலை செய்​யப்​பட்ட பெண் சேர்ந்து மூவருமாக ஒன்​றாக தங்​கி​யுள்​ளனர். கொலை செய்யப்பட்ட பெண் ஹையத்​துன் நிஷா என கூறப்படுகிறது.

குறித்த பெண் தாம்​பரம் அரு​கே​யுள்ள தனி​யார் நிறு​வனத்​தில் பணிபுரிந்து வந்ததாகவும், கூறப்படுகிறது. இவருக்கு திரு​மண​மாகி 19 வயதில் மகன் இருப்​ப​தை​யும் அறிந்​த போலீசார், அவரிடம் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

கொலை செய்​யப்​பட்​ட​  ஹையத்​துன் நிஷாவின், தலை இன்​னும் கண்​டு​பிடிக்​கப்​ப​டாத​தால் போலீ​ஸார் தலை​யைத் தேடி வரு​கின்​றனர். ஒடிசாவைச் சேர்ந்த தம்பதிகள் மணிக் உதின் லஷ்கர், மஞ்சியை போலீஸார் கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Odisha couple arrested in Kuduvancheri over body parts found in suitcase on Agra train


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->