பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளர் கைது.!
Nursery owner arrested for pregnating girl in nilgiri
நீலகிரி மாவட்டத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சோ்ந்தவா் தனியார் நா்சரி உரிமையாளர் சேகா்(50). இவரது வீட்டின் அருகே 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியை சேகா் தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக இருந்துள்ளது.
மேலும் அந்த சிறுமியை சேகர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோா், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.
அப்பொழுது, அங்கு பரிசோதனை செய்ததில், மாணவி 8 மாத கா்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், இதுகுறித்து உதகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசாா் விசாரணை மேற்கொண்டதில், சேகா் அந்த மாணவியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்ததும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சேகா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்பு ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேகரை சிறையில் அடைத்தனர்.
English Summary
Nursery owner arrested for pregnating girl in nilgiri