மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மின்னல் தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் ப்ளைவுட் உற்பத்தி தொழிற்சாலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி குட்டி குமார் யாதவ் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை குட்டி குமார் யாதவ், தொழிற்சாலையில் உள்ள சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட டவர் மீது ஏறி வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்னல் தாக்கியதால் உடலில் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுயடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், குட்டு குமார் யாதவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North State laborer killed in lightning strike


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->