ஆவடி இரட்டை கொலை - வடமாநில நபர் அதிரடி கைது.! - Seithipunal
Seithipunal


ஆவடி அடுத்த மிட்டன மல்லி இரட்டை கொலை சம்பவத்தில் வட மாநில நபரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். சித்த மருத்துவராக தனது வீட்டில் பணியாற்றி வந்த சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் நேற்றிரவு மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் அரங்கேறியதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அப்பகுதியில் இருந்த செல்போன் ஒன்றை கைப்பற்றினர். 

மேலும் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி பணத்திற்காக கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே கைப்பற்றப்பட்ட செல்போன் வைத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் வட மாநில நபர் மகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட வட மாநில நபரிடம் போலீசார் கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடமும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Indian arrested in Avadi double murder case.


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->