ஆதாரம் இருக்கு! தமிழக அரசுக்கு எதிராக சீறிய உயர்நீதிமன்றம் - பாமக வழக்கறிஞர் பாலு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கடலூர் : வலையமாதேவி பகுதியில் என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தை 12 ஆண்டுகளாக விவசாயிகள் தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தின்படி, அந்த நிலத்தை தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும், நெல் அறுவடை செய்யும் வரை இந்த கால்வாய் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு முறையிட்டிருந்தார்.

இந்த வாழ்க்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுபராமணியம், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த வழக்கில் விசாரிக்க முடியாது. ஏனென்றால் இந்த நிலங்கள் அனைத்துமே பழைய சட்டத்தின் அடிப்படையில் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த புதிய சட்டத்தின் படி முடிவு எடுக்க முடியாது என்று நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

அதேசமயம் என்எல்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது  சம்பந்தமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு தெரிவிக்கையில், "இந்த வழக்கு விசாரணையின் போது என்எல்சி நிர்வாகம் செய்யக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.

நீண்ட காலமாக என்எல்சி நிறுவனத்தால் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் நிலத்தை இழந்து, வேலையில்லாமல் இருக்கிறார்கள். பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், விளைந்திருக்கக்கூடிய நெற்பயிரில் கனரா எந்திரங்களை கொண்டு சேதப்படுத்தி படுத்தியதற்கான ஆவணங்களை, புகைப்பட ஆதாரங்களை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். 

தொடர்ந்து நீதிபதி அவர்கள், இந்த வழக்கு தொடர்பாக எதிர்தரப்பு என்எல்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உடைய வாதங்களையும், அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டிருந்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய இழப்பீடுகளை நாங்கள் கொடுத்து இருக்கிறோம். அந்த பயிர்களுக்கும் எந்த சேதத்தையும் நாங்கள் விளைவிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதி அவர்கள், மிகத் தெளிவாக புகைப்படங்களில் தெரிகிறது. இருக்கக்கூடிய விளைநிலங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் தெளிவாக தெரிகின்ற பொழுது நீங்கள் அப்படி செய்யவில்லை என சொல்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இருக்கிறது. எனவே என்எல்சியின் இந்த திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.

என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த நிலம் கையகப்படுத்துவது குறித்து நாங்கள் பல கூட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தான் இதனை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்த நீதிபதி அவர்கள், அதற்குள்ளாக என்எல்சி நிறுவனம் தமிழக அரசும் இதுவரையில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு எவ்வளவு  தர உள்ளீர்கள் என்ற விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டார்" என்று வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC Issue Chennai HC order PMK Balu Press meet july 31


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->