தமிழகத்தில் மிக கனமழை.. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அடுத்த 24 நேரத்தில் கனவே முதல் மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கணவர் முதல் மிக கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும் கோவை, தேனி, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, கரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris and covai orange alert for heavy rain


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->