அப்ப அது உண்மை தானா?! என்.ஐ.ஏ. வழக்கில் நடிகை வரலட்சமி பகீர்!  - Seithipunal
Seithipunal



கேரள : வெலிங்டன் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதை பொருள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், 14வது நபராக ஆதிலிங்கம் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இவர் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியின் உதவியாளராக இருந்ததும் தெரியவந்தது.

குணசேகரன் என்பவர் தலைவராக செயல்படும் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் அமைப்பில் தேசிய துணைத் தலைவராக ஆதிலிங்கம் இருந்ததும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து சினிமா பைனான்சியர்களுக்கு உதவியதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை நடிகை வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.

என்ஐஏ தனக்கு எந்த சம்மன் அனுப்பி உள்ளதாக வெளியான செய்திக்கு நடிகை வரலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "கேரள மாநிலத்தில் போதைப்பொருள், ஆயுதம் படத்தில் வழக்கில் கைதான ஆதிலிங்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார்.

எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. முக்கியமாக என்ஐஏ எனக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை" என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA Case Varalakshmi open talk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->