கல்வி மட்டுமே மிகப்பெரிய ஆயுதம் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

இந்நிலையில் அந்த மாணவனை தொடர்பு கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாணவரை தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்" என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியதை‌ மேற்கோள் காட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

@tnschoolsedu


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK minister tweet education was big weapon


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->