அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் தகவல்..!
next 24 hours rain in tamilnadu
திருவாரூர் நகரில் உள்ள பல இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. விளமல்,புலிவலம்,அடியக்கமங்கலம், மாங்குடி, நன்னிலம்,குடவாசல் பூந்தோட்டம்,பேரளம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
தஞ்சை மாவட்டம் வல்லம், சூரக்கோட்டை, கண்டியூர், பூதலூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் பெய்து வருகிறது. இதனால் கிறிஸ்துமஸ் விழாவுக்காக தேவாலயம் சென்ற கிறிஸ்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
மேலும், லேசான வளிமண்டல சுழற்சியின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், அதையொட்டியுள்ள உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை ஆய்வு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின், சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
English Summary
next 24 hours rain in tamilnadu