சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியான மாற்றம்.!
new judge chennai high court
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி வருகிற 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணி தமது பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி, சுதந்திர இந்தியாவின் 30ஆவது தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாகவும், ஏ.பி சஹி வரும் 11ஆம் தேதி பதவி ஏற்று கொள்கிறார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
வரும் திங்கட்கிழமை காலை 9:20 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சஹிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
English Summary
new judge chennai high court